மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு

ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது குடிபோதையில் இருந்த நபர்கள் வாகனத்தை மோதச் செய்து விபத்து ஏற்படுத்தி கொலை செய்தனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 3:50 am

DIN

ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது குடிபோதையில் இருந்த நபர்கள் வாகனத்தை மோதச் செய்து விபத்து ஏற்படுத்தி கொலை செய்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பாலு (56). இவர் ஏரல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவ ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார். கொற்கை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு உள்ள பரோட்டா கடை அருகே ஒரு இளைஞர்  தகராறு செய்து கொண்டிருந்தாராம்.  

இதையெடுத்து அந்த இளைஞரை உதவி ஆய்வாளர் பாலு சத்தம்போட்டு அனுப்பியுள்ளார். பின்னர் கொற்கை விலக்கு ரோட்டில் சப்-இன்ஸ்பெக்டர் பாலு சென்றபோது, புரோட்டா கடையில் தகராறு செய்த இளைஞர் சரக்கு வேனுடன் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக உதவி ஆய்வாளர் பாலு பைக்கில் சென்றபோது அந்த இளைஞர் லோடு வேனை பைக் மீது மோதவிட்டுள்ளார்.

இதில் கீழே விழுந்த சப் இன்ஸ்பெக்டர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி துரை கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இது தொடர்பாக ஏரல் போலீசார் வழக்குப் பதிந்து, போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை லோடு வேனால் மோதி கொலை செய்த இளைஞரை 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். உயிரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலுவின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.