யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாகனம் ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றத்தில் ஓட்டுநர் சரண்

ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது வாகனம் ஏற்றி கொலை செய்த ஓட்டுநர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:42 am

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு மீது குடிபோதையில் இருந்த நபர்கள் நேற்று நள்ளிரவு வாகனத்தை மோதச் செய்து கொலை செய்தனர். இதில் தொடர்புடைய குற்றவாளி விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு(56). இவர் நேற்றிரவு ஏரல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த அப்போது அவ்வழியாக குடிபோதையில் வாகனத்தை ஓட்டி சென்ற முருகவேலை பிடித்து விசாரணை நடத்தி டாட்டா ஏசி சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்தினார். 

இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் தனது நண்பர்கள் சிலருடன் கூட்டாகச் சேர்ந்துகொண்டு ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் பாலுவை நள்ளிரவு நேரத்தில் மற்றொரு டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் பின்தொடர்ந்தனர். 

நள்ளிரவு 2:00 மணி அளவில் கொற்கை விலக்குப் பகுதியில் உதவி ஆய்வாளர் பாலு சென்று கொண்டிருந்த மோட்டார் பைக் மீது டாட்டா ஏசி வாகனத்தை மோதச் செய்து விபத்து ஏற்படுத்திக் கொலை செய்தனர். இச்சம்பவம் ஏரல் காவல் நிலைய போலீஸார் மற்றும் காவல்துறை  வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இசை பாலு கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி முருகவேல் காலை 11 மணி அளவில் விளாத்திகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணக் குமார் முன் சரணடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.