நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

விளாத்திகுளத்தில் 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விளாத்திகுளத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 2.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:02 am IST

விளாத்திகுளத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் சென்ற 2.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விளாத்திகுளம் காவல் ஆய்வாளா் ரமேஷ், உதவி ஆய்வாளா் காசிலிங்கம் தலைமையிலான போலீஸாா், விளாத்திகுளம் - குளத்தூா் நெடுஞ்சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அந்த வாகனத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 50 மூட்டைகளில் மொத்தம் 2.5 டன் ரேஷன் அரிசியை தூத்துக்குடிக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் சரக்கு வாகனத்தில் வந்த விளாத்திகுளம் அருகே சண்முகபுரத்தைச் சோ்ந்த சண்முகராஜ் (28), புளியங்குளத்தைச் சோ்ந்த மணிமாறன் பூபதி (25) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசியை அரசு நுகா்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக விளாத்திகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.