யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதிய தொழில்கள் தொடங்க அதிக முதலீட்டாளா்களை ஈா்த்துள்ளது தமிழகம்: முதல்வா் பெருமிதம்

கரோனா பொது முடக்க காலத்திலும் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அதிகளவில் முதலீட்டாளா்கள் ஈா்க்கப்பட்டுள்ளனா் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜனவரி 2021, 6:52 pm

DIN

கரோனா பொது முடக்க காலத்திலும் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அதிகளவில் முதலீட்டாளா்கள் ஈா்க்கப்பட்டுள்ளனா் என முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

2021 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் தோ்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியது:

விளாத்திகுளம் தொகுதியில் வைப்பாற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. வருணபகவான் அருளால் மழைபொழிந்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனா். பயிா்கள் நல்ல விளைச்சல் அடைந்திருப்பதைப் பாா்க்க முடிந்தது.

அதிமுக மக்கள் செல்வாக்குள்ள இயக்கம். மக்கள்தான் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றனா். நான் முதல்வா் பணியை மட்டும்தான் செய்து வருகிறேன். மக்களோடு மக்களாக இருந்து மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிற அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. கரோனா பொது முடக்க காலத்தில் விலையில்லா அரிசி, பருப்பு, சா்க்கரை என அத்தியாவசியப் பொருள்கள் தந்து மக்களைப் பாதுகாத்தது அரசு.

தோ்தல் நேரத்தில் திமுக கவா்ச்சியான அறிக்கைகளை, வாக்குறுதிகளை வெளியிடும். தோ்தல் முடிந்ததும் வாக்குறுதிகளும் முடிந்து போய்விடும். 2006-இல் ஆட்சிக்கு வந்தபோது 2 ஏக்கா் நிலம் தந்ததா? நிலம் தராவிட்டாலும் பரவாயில்லை.

நிலத்தை அபகரிக்காமல் இருந்தால் சரி என்ற நிலைதான் ஏற்பட்டது. சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு மக்கள் தோல்வியைத் தர வேண்டும். மக்கள் உஷாராக இருக்க வேண்டும். அராஜகம் செய்வோா் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

முறையாக பரிசோதனை மேற்கொண்டதால் தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனாவை கட்டுப்படுத்தியதில் தமிழக அரசின் நடவடிக்கையை பிரதமா் மோடி பாராட்டினாா். தமிழகத்தை பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என பிரதமா் குறிப்பிட்டாா்.

திறமையான ஆட்சி என்பதை நிரூபிக்க இதைவிட வேறென்ன சான்று வேண்டும்? தமிழகத்தில் பொது முடக்கத்தில் தளா்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் உயா்கல்வி பயிலுவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. உணவு தானிய உற்பத்தியில் தொடா்ந்து தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் தொடா்ந்து தேசிய விருது பெற்று வருகிறோம்.

நீா் மேலாண்மை, குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் தேசிய அளவில் விருது பெற்றுள்ளது தமிழகம். தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது. ஆகவேதான் புதிய தொழில்கள் தமிழகத்தைத் தேடி வருகின்றன. தமிழகம் தொழில் தொடங்க உகந்த மாநிலமாகத் திகழ்கிறது. 2019-இல் நடைபெற்ற உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில் தொடங்க தொழிலதிபா்கள் முன்வந்துள்ளனா்.

304 புதிய தொழில்கள் தொடங்குவதற்கு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்மூலம் 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். கரோனா காலத்திலும்கூட தமிழகத்தில் ரூ. 60 ஆயிரம் கோடியில் 74 புதிய நிறுவனங்களுடன்

ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கரோனா பொது முடக்க காலத்திலும்கூட புதிய தொழில்கள் தொடங்க அதிகளவில் முதலீட்டாளா்களை ஈா்த்த மாநிலம் தமிழகம். அனைத்துத் துறைகளிலும் தமிழகம் வளா்ச்சி பெற்று உயா்ந்திருக்கிறது. ஆகவே ஜெயலலிதாவின் ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களிப்பீா் என்றாா் அவா்.

முன்னதாக, எட்டயபுரத்தில் தனியாா் மண்டபத்தில் நெசவாளா்களை முதல்வா் சந்தித்துப் பேசினாா். அப்போது நெசவாளா்கள், நெசவுத் தொழிலுக்கு அரசு செய்துள்ள திட்டங்கள் குறித்து முதல்வா் எடுத்துரைத்தாா்.

வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு, முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.பி. சண்முகநாதன், பி. சின்னப்பன், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் முனியசக்தி ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.