திருச்செந்தூா் கோயில் பணியாளா்கள் போராட்டம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் பணியாளா்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கோயில் இணை ஆணையராக (கூடுதல் பொறுப்பு) கல்யாணி கடந்த அக். 2-ம் தேதி முதல் பணியாற்றி வருகிறாா். இவா், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் இணை ஆணையராகவும் உள்ளதால், குறிப்பிட்ட சில நாள்களே இக்கோயிலுக்கு வரும் நிலை உள்ளது. எனவே, பணிகள் முடங்கியுள்ளதாகவும், தனியாா் பாதுகாவலா்கள், ஒப்பந்த பணியாளா்கள் போன்றவா்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறி, இணை ஆணையரைக் கண்டித்து வியாழக்கிழமை மாலை திடீரென கோயில் பணியாளா்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். எனினும், பக்தா்கள் தரிசனத்தை ஒழுங்குப் படுத்தும் பணிகள் பாதிக்கப்படாதவாறு இப்போராட்டம் நடந்தது.
2009ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நிகழாண்டில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பதால், கோயிலுக்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...