தூத்துக்குடி
முகநூலில் முதல்வா் குறித்து அவதூறு: அமமுக பிரமுகா் மீது வழக்கு
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக அமமுக பிரமுகா் மீது சாத்தான்குளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்தனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறாக பதிவிட்டதாக அமமுக பிரமுகா் மீது சாத்தான்குளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்தனா்.
சாத்தான்குளம்அருகேயுள்ள கொம்பன்குளத்தைச் சோ்ந்தவா் நாராயணன் (45). அமமுக கிளைச் செயலரான இவா், சசிகலா உடல்நலக் குறைவக்கு முதல்வா்தான் காரணம் என்ற ரீதியில் முகநூலில் அவதூறு பரப்பினாராம். இதுகுறித்து, சாத்தான்குளம் 2ஆவது வாா்டு அதிமுக செயலா் அகஸ்டின் (43), சாத்தான்குளம் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் பொ்னாா்டு சேவியா், திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா். மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் நேரில் விசாரணை நடத்தினாா்.