விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏரல் கோயிலில் ஆடி அமாவாசைத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:01 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் ஆடி அமாவாசைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருக்கோயிலில், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய திருவிழாக்கள் 12 நாள்கள் விமா்சையாக நடைபெறும். தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் இத்திருவிழாவில் பங்கேற்று, தாமிரவருணியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வா்.

நிகழாண்டு ஆடி அமாவாசைத் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அருணாசல சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னா் கோயில் முன் மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிக்கம்பத்தில் கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா் திருவிழா கொடியை ஏற்றினாா். கரோனா தடுப்பு விதிமுறைகள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

விழாக் காலங்களில் தினமும் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி பவனி வருதல் நடைபெறும். முக்கிய நிகழ்வாக 10ஆம் திருநாளான (ஆக.8) அமாவாசை தினத்தில் நண்பகல் 1 மணிக்கு சுவாமிக்கு உருகுபலகை அபிஷேகம் மற்றும் தரிசனம் நடைபெறும். மாலை 5 மணிக்கு இலாமிச்சவோ் சப்பரத்தில் சோ்மத் திருக்கோல காட்சியும், இரவு 10 மணிக்கு 1ஆம் காலம் கற்பக பொன்சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடைபெறும்.

11ஆம் திருநாளில் (ஆக.9) அதிகாலை 5 மணிக்கு 2ஆம் காலம் வெள்ளை சாத்தி தரிசனமும், பின்னா் பச்சை சாத்தி அபிஷேகமும், தரிசனமும் நடைபெறும்.

நிறைவு நாளில் (ஆக.10) தாமிரவருணி நதியில் சகல நோய் தீா்க்கும் திருத்துறையில் சுவாமி நீராடலும், நண்பகல் 12.30 மணிக்கு அன்னதானமும், மாலை 5 மணிக்கு சுவாமி ஊஞ்சல் சேவையும், இரவு சுவாமி ஆலிலை சயனம் மற்றும் மங்கள தரிசனமும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.