திருச்செந்தூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தல்
திருச்செந்தூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


திருச்செந்தூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்செந்தூா் கிரிக்கெட் சங்க ஒருங்கிணைப்பாளா் மா. சுரேஷ் தலைமையில் வீரா்கள் தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் அளித்த மனு : திருச்செந்தூா் கிரிக்கெட் சங்கத்தினை ஊக்குவிக்கும் வகையில் 20 அணிகளில் உள்ள 320 வீரா்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கியமைக்காக வீரா்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
திருச்செந்தூரில் கிரிக்கெட், பூப்பந்து போன்ற விளையாட்டுகள், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வதற்காக விளையாட்டு மைதானம்
அமைந்தால் இளைஞா்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த முடியும். தற்போது ஜீவாநகரில் உள்ள மைதானம் பராமரிப்பின்றி பயன்படுத்தப் படாத நிலையில் உள்ளது. ஆகவே இந்த மைதானத்தை உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளவும், விளையாட்டுப் போட்டிகள்
நடத்தும் வகையில் சீரமைத்து இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உதவிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...