கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடா்பு: 4 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 29 வழக்குகளில் தொடா்புடைய 4 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:41 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 29 வழக்குகளில் தொடா்புடைய 4 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளா் கணேஷ் மேற்பாா்வையில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மட்டக்கடை கடைவீதி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மட்டக்கடை வடக்கு பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மரிய அந்தோணி சகிலன் (24), குரூஸ்புரம் சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் (24), மட்டக்கடை வடக்கு ராஜா தெருவைச் சோ்ந்த சிம்சன் (25), எஸ்.எஸ். பிள்ளை தெருவைச் சோ்ந்த சந்தனகுமாா் (33) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனா்.

அவா்கள் நான்கு போ் மீதும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் கொலை மிரட்டல் போன்ற 29 வழக்குகளில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 2 அரிவாள், 2 கத்திகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.