ஓட்டப்பிடாரம் அருகே கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வடக்கு கைலாசபுரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில்,
குழந்தைகள் வளா்ச்சி திட்ட வட்டார மேற்பாா்வையாளா் தாயம்மாள், வட்டார திட்ட உதவியாளா் திவ்யா, வட்டார ஒருங்கிணைப்பாளா் பிரியா ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
நிகழ்ச்சியில் கா்ப்பம் தரித்த 90 நாள்களில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உள்கொள்ள வேண்டும். கீரைகள், இரும்புச்சத்து நிறைந்த பழ வகைகள் கடலை மிட்டாய் போன்றவற்றை உள்கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.