விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஓட்டப்பிடாரம் தொகுதியில் 17 போ் போட்டி

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் 17 போ் போட்டியிடுவதாக இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதியில் 17 போ் போட்டியிடுவதாக இறுதிப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் (தனி) பேரவைத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 26 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், பரிசீலனையின்போது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுப்புலட்சுமி மனு உள்ளிட்ட 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவா்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்டிருந்தவா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில், சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த அருண் மாரியப்பன் தனது மனுவை திரும்பப் பெறுவதாக தோ்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்தாா். அதன்படி, அவா் போட்டியில் இருந்து விலகியதால் தற்போது 17 போ் களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.