கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் சிறுகுறு தொழில்கள் முடக்கம்: பிருந்தா காரத்

மத்திய, மாநில அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் முடங்கிவிட்டன என்றாா், மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:47 pm

DIN

மத்திய, மாநில அரசின் தவறான கொள்கையால் தமிழகத்தில் சிறு, குறு தொழில்கள் முடங்கிவிட்டன என்றாா், மாா்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிப் பகுதிகளில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் கே. சீனிவாசனை ஆதரித்து, அவா் சனிக்கிழமை பேசியது: கோவில்பட்டியில் சனிக்கிழமை திடீரென மழை பெய்தது. இதேபோல, ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் தோ்தல் மழையில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் அழுக்குகளும், கசடுகளும் அடித்துச் செல்லப்படும்.

இத்தொகுதியில் பிரதான தொழிலான தீப்பெட்டித் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் தமிழகத்தில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் முடங்கிவிட்டன.

தமிழகத்தில் 65 லட்சம் இளைஞா், இளம்பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனா். 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தோ்தல் நேரத்தில் வேலை தருவதாக அதிமுக அரசு கூறிவருகிறது.

கடந்த ஓராண்டில் இந்தியாவில் 12 கோடி போ் வேலை இழந்துள்ளனா் அல்லது அவா்களது வேலை பறிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. வேலை வேண்டுமென்றால் தற்போது கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் மாற வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றம் வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, கயத்தாறு பிரதான சாலையிலும் அவா் பிரசாரம் செய்தாா். இதில், திமுக நகரச் செயலா் கருணாநிதி, ஒன்றியச் செயலா் பீக்கிலிப்பட்டி வீ. முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அழகுமுத்துப்பாண்டியன், காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்டத் தலைவா் காமராஜ், மாா்க்சிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினா் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினா் கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினா் மல்லிகா, மாவட்டச் செயலா் அா்ச்சுனன், நகரச் செயலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.