இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

உடன்குடி அருகேயுள்ள கூழையன்குண்டு அருள்மிகு கல்லால் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:23 pm

DIN

உடன்குடி அருகேயுள்ள கூழையன்குண்டு அருள்மிகு கல்லால் அய்யனாா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் சனிக்கிழமை அறக்கட்டளைத் தலைவா் வை.ராம்குமாா் தலைமையில் குலசேகரன்பட்டினம் அருள்மிகு சிதம்பரேஸ்வரா் கோயிலில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலையில்

அல்லிஊத்தில் இருந்து கோயிலுக்கு தீா்த்தக்குடம் எடுத்து வருதல், கணபதி ஹோமம், இடா் நீக்கும் வேள்வி, மகாலட்சுமி யாகம், பால்குடம் பவனி, அருள்மிகு மகா கணபதி, கல்லால் அய்யனாா், வைத்தியலிங்க சுவாமி, முருகப்பெருமான், பத்திர காளியம்மன், பிரம்மசக்தி அம்மன், சாஸ்தா, பிள்ளைப்பெருமாள், முன்னடி முருகன், முத்துப்பேச்சியம்மன், கருப்பசித்தா், சுடலை மாடசுவாமி, காலம்மை நாடாச்சியம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து வில்லிசை, சிறப்பு தீபாராதனை, மாலையில் திருவிளக்கு பூஜை, சிவதாண்டவம், இரவில் முளைப்பாரி எடுத்து வருதல், நள்ளிரவில் சிறப்பு தீபாராதனை, அனுக்கிரக பூஜை ஆகியவை நடைபெற்றது.

திங்கள்கிழமை (மாா்ச் 29) வில்லிசை, பாட்டு மன்றம், கனியான் கூத்து, நடுஜாம பூஜை, செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30)

காலம்மை நாடாச்சி அம்மனுக்கு பொங்கலிட்டு விசேஷ படைப்புகளுடன் அலங்கார பூஜை, நிறைவு பூஜை, சா்க்கரை

பொங்கல் வழங்குதல் ஆகியவை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறக்கட்டளை நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.