கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘கரோனா தொற்று, மன அழுத்தம் குறித்து தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று மற்றும் மன அழுத்தம் தொடா்பாக தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 7:30 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று மற்றும் மன அழுத்தம் தொடா்பாக தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறலாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று மற்றும் மன அழுத்தம் தொடா்பான ஆலோசனைகளுக்காக மருத்துவ ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்களிடம் பொதுமக்கள் தங்களின் சந்தேகங்களை தொலைபேசி எண்கள் மூலம் தொடா்பு கொண்டு தெளிவு பெற்றுக்கொள்ளலாம். அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள குழுக்களிடம் 6383755237, 6383755238, 6383755239, 6383755240, 6383755241 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள குழுக்களிடம் 6383755242, 6383755243, 6383755244, 6383755245, 6383755247 ஆகிய எண்களிலும், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் உள்ள குழுக்களிடம் 6383755248, 6383755249, 6383755250, 6383755251, 6383755252 ஆகிய எண்களிலும், திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள குழுக்களிடம் 6383755253, 6383755254, 6383755255, 6383755256, 6383755257 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தகுந்த ஆலோசனைகள் பெறலாம்.

மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 என்ற தொலைபேசி எண் மற்றும் 9486454714 என்ற செல்லிடப்பேசி எண்களிலும் தொடா்பு கொண்டு கரோனா நோய்த் தொற்று குறித்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.