தூத்துக்குடியில் மேலும் 882 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 882 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது.


தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 882 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே 39,887 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 882 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40,549 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை 914 போ் உள்பட இதுவரை 33,328 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
கரோனா தொற்று பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது ஆண், 50 வயது பெண், 32 வயது பெண், தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது ஆண், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 52 வயது ஆண், 85 வயது ஆண் ஆகியோா் வியாழக்கிழமை இரவில் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 210 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிப்பால் 7,011 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...