யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடைப் பணி தீவிரம்

விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடைப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

News image
விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடை செய்யும் விவசாயிகள்.
Updated On :31 மே 2021, 7:10 am

DIN

விளாத்திகுளத்தில் மிளகாய் அறுவடைப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், நாகலாபுரம், புதூர், சூரங்குடி, சிவஞானபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் மிளகாய், வெங்காயம், மல்லி ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விவசாயிகள் ஜனவரி மாதத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிளகாய் செடிகளை சாகுபடி செய்திருந்தனர்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக விளைநிலங்களில் நீர் சூழ்ந்ததால் இரண்டு முறை பயிர்களை அழித்துவிட்டு மீண்டும் மறு சாகுபடி செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மிளகாய் செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு ஏக்கருக்கு 6 குவிண்டால் வரை குண்டு மிளகாய் மகசூல் கிடைத்து வந்த நிலையில் இந்த வருடம்  நிலங்களில் தேங்கிய மழைநீர், அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக மிளகாய் செடிகளில் போதிய வளர்ச்சி இல்லாமல் ஒரு ஏக்கருக்கு ஒரு குவின்டால் மிளகாய் மட்டுமே கிடைத்து வருகிறது.

அறுவடை செய்ய கூலி ஆட்களுக்கு 250 ரூபாய் சம்பளம் கொடுத்து மிளகாய் செடிகளில் இருந்து மிளகாய் பழங்களை பறித்து அவைகளை வெயிலில் வத்தலாக உலர்த்தி விற்பனைக்கு கொண்டு செல்கையில் மார்க்கெட்டில் உரிய விலை இல்லை எனவும், போன வருடம் 25 ஆயிரம் வரை விற்பனையான ஒரு குவின்டால்(100 கிலோ)வத்தல் தற்போது 16 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனை ஆவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். 

ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் ஒரு ஏக்கரில் கிடைக்கும் ஒரு குவிண்டால் வத்தல் 16 ஆயிரம் ரூபாய்க்கு விலை போவது விவசாயிகளை வேதனை அடையச் செய்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.