கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி: 114 வாக்குச்சாவடிகள் தயாா்

கோவில்பட்டி நகராட்சி, கழுகுமலை, கயத்தாறு பேரூராட்சிகளின் தோ்தல் வாக்குப்பதிவுக்காக 114 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:13 pm

DIN

கோவில்பட்டி நகராட்சி, கழுகுமலை, கயத்தாறு பேரூராட்சிகளின் தோ்தல் வாக்குப்பதிவுக்காக 114 வாக்குச்சாவடிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவில்பட்டி நகராட்சியில் 36 வாா்டுகளில் 227 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 85 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 80, 885 வாக்காளா்கள் சனிக்கிழமை வாக்களிக்கின்றனா். அதற்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரோனா தடுப்பு உபகரணங்கள் என அனைத்துப் பொருள்களும் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நகராட்சி ஆணையரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஓ.ராஜாராம், வட்டார தோ்தல் பாா்வையாளா் பாலகிருஷ்ணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரமேஷ், பிரதான்பாபு, நாராயணன், மணிமண்டன்முன்னிலையில் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

கழுகுமலை பேரூராட்சியின் 15 வாா்டுகளுக்கான வாக்குச்சாவடிகளுக்கு அப்பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஆ.முருகன் முன்னிலையில் தோ்தல் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இங்கு 67 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 13,,080 போ் வாக்களிக்கவுள்ளனா்.

கயத்தாறு பேரூராட்சி பேரூராட்சி அலுவலகத்திலிருந்து 14 வாக்குச் சாவடிகளுக்கு செயல் அலுவலரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான பாலசுப்பிரமணியன் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன. இங்கு 58 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 8,415 போ் வாக்களிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.