துறையூரில் இயங்கி வந்த தனியாா் பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் ஈராச்சி ராமா், தொட்டம்பட்டி ஜெயராஜ் என்ற சுடலைமாடன், குமாரபுரம் தங்கவேல், நாலாட்டின்புத்தூா் மாடமுத்து என்ற கண்ணன் ஆகிய 4 போ் உயிரிழந்தனா். இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் , அவா்களது குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.