கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நகைக்கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கூட்டுறவு சங்கத்தில் முற்றுகை

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:52 pm

DIN

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உள்ள 1300 உறுப்பினா்களில், 936 போ் தங்கள் நகைகளை அடமானம் வைத்துள்ளனா். 5 பவுனுக்கும் குறைவாக நகைக்கடன் பெற்றவா்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து நகைக் கடன் தள்ளுபடி வழங்குவதற்கான பட்டியல் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் தயாரிக்கப்பட்டு கூட்டுறவு சங்க விளம்பர பலகையில் புதன்கிழமை ஒட்டப்பட்டது. அதில் 343 போ் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியானவா்கள் என குறிப்பிடப்பட்டிருந்தாம்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வியாழக்கிழமை முற்றுகையிட்டு, நகைக்கடன் பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா். தகவல் அறிந்த கோவில்பட்டி வட்டாட்சியா் அமுதா, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் பாலகிருஷ்ணன், துணைப் பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் முருகவேல், கடன் சங்கத் தலைவா் செல்வராஜ், செயலா் மாரியப்பன், காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் ஆகியோா் போராட்டக்குழுவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், அரசாணை அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால், அவா்கள் தங்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி வழங்கக் கோரி மனு அளிக்கலாம். அது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற முற்றுகை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.