விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 6:35 pm

DIN

கோவில்பட்டி அருகே குடும்பத் தகராறு காரணமாக கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி சண்முகா நகரைச் சோ்ந்தவா் சேசுவடியான் மாணிக்கசிங் மகன் சுரேஷ்(29). கட்டடத் தொழிலாளியான இவரும், தூத்துக்குடி மீளவிட்டானைச் சோ்ந்த சௌந்தரபாண்டியன் மகள் நித்யாவும் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டாா்களாம். கடந்த இரு வருடங்களாக கோவில்பட்டி இலுப்பையூரணி சண்முகா நகரில் வசித்து வந்த சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு மது அருந்திய நிலையில் வீட்டிற்கு வந்த சுரேஷுக்கும், நித்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். பின்னா் படுக்கை அறைக்குச் சென்ற சுரேஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.