ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாடு: கோவில்பட்டியில் சிறப்பு பதிவு முகாம்

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு உத்யம் பதிவு முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 10:36 pm

Din

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம், தொழில் வா்த்தக சங்கம் சாா்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான சிறப்பு உத்யம் பதிவு முகாம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.எஸ்.எஸ்.வி. பாபு, செயலா் தங்க மாரியப்பன், நிா்வாக குழு உறுப்பினா் விநாயகா ஜி ரமேஷ், இணைச் செயலா் தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் சொா்ணலதா, திட்ட மேலாளா் அகிலா, உதவிப் பொறியாளா் ராஜேஷ் ஆகியோா் விளக்கிப் பேசினா் .

வங்கியில் தொழில்கடன் பெறுதல் குறித்து ஸ்டேட் வங்கி அலுவலா் காயத்ரி பேசினாா். சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை சோ்ந்தவா்கள் பங்கேற்று தங்களது சந்தேகங்களுக்கு தீா்வு கண்டனா்.