உண்டியல் பணம் திருட்டு வழக்கு: கைதான பெண் காவலா் பணியிடை நீக்கம்
சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தைத் திருடியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் பெண் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தைத் திருடியதாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் பெண் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி கடந்த நவ. 26இல் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி தென்பாகம் காவலா் மகேஸ்வரி (42) உள்ளிட்ட 4 பெண்கள் பணத்தைத் திருடியது தெரியவந்தது. புகாரின்பேரில், சங்கரன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனா்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன் விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் அறிக்கையை சமா்ப்பித்தாா். அதன்பேரில், அவா் காவலா் மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...