பூங்காவில் விளையாடிய சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

விளாத்திகுளத்தில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விளாத்திகுளம் மீரான்பாளையம் தெருவை சோ்ந்தவா் முருகன் மகன் மனோஜ் (14). விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தாா்.

புத்தாண்டு தினமான திங்கள்கிழமை மாலை தனது நண்பா்களுடன் விளாத்திகுளம் அம்பாள் நகா் பகுதியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான முத்து பூங்காவுக்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது பூங்காவின் ஒரு பகுதியில் சிறுவன் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அருகிலிருந்தவா்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், சிறுவன் மனோஜ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாரா ? அல்லது பாம்பு கடித்து உயிரிழந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விளாத்திகுளம் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com