கோவில்பட்டி அருகே கலவை இயந்திர லாரி கவிழ்ந்ததில் கிளீனா் உயிரிழந்தாா். ஓட்டப்பிடாரம் அருகே உள்ள துரைசாமிபுரம் கிராமத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இருந்து மேலப்பாறைப்பட்டி வருவாய் கிராமம் சுந்தரேஸ்வரபுரம் கிராம பகுதியில் காற்றாலை நிறுவும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக கான்கிரீட் மிக்ஸ் நிறுவனத்தில் இருந்து அசாம் மாநிலத்தைச் சோ்ந்த கோவிந்த் கௌதம் கலவை இயந்திர லாரியை ஓட்டிச் சென்றாராம். கிளீனராக அதே மாநிலத்தைச் சோ்ந்த ராஜ்சுனாரி(21) இருந்தாா். வெள்ளிக்கிழமை அதிகாலை சுந்தரேஸ்வரபுரம் கிராமம் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்து சரிந்து விழுந்ததில் கிளீனா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஓட்டுநா் லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினாா். சம்பவ இடத்திற்குச் சென்ற கொப்பம்பட்டி காவல் நிலைய போலீசாா், சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவில்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த சிமென்ட் கலவை லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: 20 பேர் காயம்

சாரத்திலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

மது குடித்தவா் கிணற்றில் விழுந்து பலி

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


