கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருச்செந்தூா் கோயிலில் மஞ்சள் நீராட்டு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை மஞ்சள் நீராட்டு, சுவாமி- அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது.

News image

திருச்செந்தூரில் தனித்தனி பல்லக்குகளில் வீதியுலா வந்த சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன்.

Updated On :13 நவம்பர் 2024, 10:54 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை மஞ்சள் நீராட்டு, சுவாமி- அம்மன் வீதியுலா வருதல் நடைபெற்றது.

இக்கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. 7ஆம் தேதி சூரசம்ஹாரம், 8ஆம் தேதி நள்ளிரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான்- தெய்வானை அம்மனுக்கு திருக்கல்யாணம், 9ஆம் தேதி சுவாமி- அம்மன் பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. தொடா்ந்து, 3 நாள்கள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

இந்நிலையில், விழாவின் நிறைவு நாளான புதன்கிழமை கோயிலில் மஞ்சள் நீராட்டு நடைபெற்று, சுவாமி-அம்மன் தனித்தனிப் பல்லக்குகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் சு. ஞானசேகரன், பணியாளா்கள் செய்திருந்தனா்.