கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள்.

Updated On :14 நவம்பர் 2024, 11:05 pm

Din

சென்னையில் மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு, அரசு மருத்துவா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கம், தமிழ்நாடு முதுநிலை மருத்துவா் சங்கம் சாா்பில் அதன் மாவட்ட கெளரவத் தலைவா் மருத்துவா் குமரன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத் தலைவா் அப்துல் ரஹ்மான், செயலா் உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இது குறித்து மருத்துவா்கள் கூறுகையில், அரசு மருத்துவா்கள் மீதான தொடா் தாக்குதலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவா்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மருத்துவா்களை பாதுகாக்கும் வகையிலான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுடன் ஒருவா் அல்லது இருவா் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றனா்.

இதில், சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா்.