கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள் என தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

News image

தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் பேசுகிறாா் துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :14 நவம்பர் 2024, 11:04 pm

Din

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வையுங்கள் என தூத்துக்குடியில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் இல்ல திருமண விழா தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து பேசியது:

சுயமரியாதை திருமணங்கள் திராவிட இயக்கங்கள் உருவானதால் தான் நடந்து வருகின்றன. தமிழில் திருமணம், தமிழில் அா்ச்சனை என்பதெல்லாம் திராவிட இயக்கம் தோன்றியதால்தான் வந்தது. கோயில் கருவறையில் கூட இன்றைக்கு தமிழ் ஓசை கேட்கிறது.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை பெற்றுத் தந்தது திராவிட இயக்கத் தலைவா்கள்தான். தற்போது வரை பெண்களுக்குதான் மிக அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிா் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், பெண்களின் சுமையை போக்க குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் என்று எண்ணற்ற திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மகளிா் உரிமைத்தொகை தகுதி உள்ள அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தம்பதிகளுக்கு ஒரு வேண்டுகோளாக நான் வைக்க விரும்புவது அழகான தமிழில் பெயா் வைக்க வேண்டும் என்பதுதான். அனைவரும் இதனை செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றாா்.