ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சூறாவளி காற்று: தூத்துக்குடி மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

வங்கக் கடலில் சூறாவளிக் காற்று எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:17 pm

Din

வங்கக் கடலில் சூறாவளிக் காற்று எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.

தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்தது. இந்தநிலையில், தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு சுமாா் 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் எச்சரிக்கை விடுத்திருந்தனா்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடலுக்குச் செல்லவில்லை.