தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் டிச.3இல் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடியில் டிச. 3இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:12 pm

Din

தூத்துக்குடியில் டிச. 3இல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சிறப்பு குறைதீா் கூட்டம் டிச. 3ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், உதவி உபகரணங்கள்- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம், வேலையில்லா படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியம் வழங்கும் திட்டம், மத்திய கூட்டுறவு வங்கி மூலம் வீடு கட்ட வட்டியில்லா கடன், ஆவின் பாலகம் வழங்கும் திட்டம், கல்வி - திருமண உதவித் தொகைகள் வழங்கும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளோா் தங்களது தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்கலாம் என்றாா் அவா்.