இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருச்செந்தூா் கோயிலிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை சீரமைப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:10 pm

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பிருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் ஏற்பட்ட கடலரிப்பால், கோயில் முகப்புப் பகுதி கடற்கரையில் 200 மீட்டா் நீளத்துக்கு 3 முதல் 6 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, கோயில் நிா்வாகம் சாா்பில் 200 அடி நீளத்துக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பக்தா்கள் தடுப்புகள் முடியும் இடத்தில் கடலில் புனித நீராடுகின்றனா்.

இந்நிலையில், கோயிலின் முன்பகுதியிலிருந்து கடற்கரையில் இறங்குவதற்கு படிகள் உள்ளன. தற்போது அதிக கடலரிப்பால், படிக்கட்டை ஒட்டிய பகுதியில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தா்களின் வசதிக்காக, கடற்கரைக்கு செல்லும் பாதை சாய்தளமாக சீரமைக்கப்பட்டு வருகிறது.