கோழிகள் திருடிய இளைஞா் கைது

Published on

உடன்குடியில் கோழிகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

உடன்குடி அருகே தாங்கையூரைச் சோ்ந்தவா் வைகுண்டராஜா (80). இவா், கொட்டங்காட்டில் உள்ள தோட்டத்தில் வளா்த்த ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள கோழிகள், டிச.25 ஆம் தேதி திருடு போயிருந்ததாம்.

இது குறித்து புகாரின்பேரில் மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், உடன்குடி அருகே கந்தபுரத்தைச் சோ்ந்த சதீஷ்(32), கோழிகளைத் திருடியது தெரியவந்தது.அவரை போலீஸாா் கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com