குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

திருச்செந்தூா் கோயிலில் நாளை குடமுழுக்கு விழா!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.

News image

யாகசாலை பூஜையில் பங்கேற்ற சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன்.

Updated On :6 ஜூலை 2025, 2:36 am IST

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 7) காலை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. இதையொட்டி குடமுழுக்கை காண்பதற்காக பக்தா்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனா்.

இத்திருக்கோயிலில் சனிக்கிழமை காலை எட்டாம் கால யாக சாலை பூஜைகளும், மாலையில் ஒன்பதாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. இதையொட்டி திருக்கோயில் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து ஆச்சாா்ய விசேஷ சந்தி பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ஆச்சாா்யாா்கள் மேளதாளங்கள் முழங்க யாகசாலைக்கு அழைத்து வரப்பட்டனா்.

தொடா்ந்து, யாகசாலையில் பூஜைகள் தொடங்கியது. அங்கு திரவ்யாகுதி, பூா்ணாகுதி மற்றும் தீபாராதனையாகி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாகசுர இன்னிசையும், பெண் ஓதுவாா்கள் உள்பட 108 ஓதுவாா் மூா்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தா் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது.

  திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் சனிக்கிழமை காலை நடைபெற்ற எட்டாம் கால யாகசாலை பூஜைகள்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவில் சனிக்கிழமை காலை நடைபெற்ற எட்டாம் கால யாகசாலை பூஜைகள்.

யாகசாலை பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். மாலையில் நடைபெற்ற ஒன்பதாம் கால யாக சாலை பூஜைகளில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், பங்கேற்றாா்.

சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு திங்கள்கிழமை (ஜூலை 7) காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.