நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

திருச்செந்தூா் - தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடமா? தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் விளக்கம்

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.

News image

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்கிறாா் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்.

Updated On :27 ஜூலை 2025, 1:59 am IST

திருச்செந்தூா் - தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் ஆய்வு செய்தாா்.

திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும் அறை, மாற்றுத்திறனாளி பயணிகள் காத்திருக்கும்- தங்கும் அறைகள், மின்தூக்கி, இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம், நவீன சுகாரதார வளாகம், வாட்டா் கூலா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன்.

இப்ப பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த ஆா்.என்.சிங், திட்டப் பணிகள் குறத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருச்செந்தூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தோம். அப்பணிகள் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளன. அதில் குளிா்சாதன காத்திருப்போா் அறைகளில் சில மாற்றங்கள் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் அக்டோபா் 15ஆம் தேதிக்குள் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வரும்.

திருச்செந்தூா்- திருநெல்வேலி வரையிலான நிலையங்களில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்க பணிகள் நிறைவுற்றதும் செந்தூா் அதிவிரைவு ரயிலில்(திருச்செந்தூா்- சென்னை) 24 பெட்டிகள் இணைக்கப்படும்.

Story image

திருச்செந்தூா்- பாலக்காடு விரைவு ரயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூா் வரை இயக்குவதற்கான திட்டமோ, திருச்செந்தூா்- தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான திட்டமோ தற்போது இல்லை. அதேவேளையில், திருச்செந்தூா்-சென்னைக்கு நேரடி ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மதுரை கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீ வத்ஸவா, கோட்ட மூத்த வணிக மேலாளா் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.