தூத்துக்குடி
எஸ்.பி. அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். அப்போது, மாவட்ட காவல் நிலையங்களில் புகாரளித்த 5 போ், புதிதாக மனு கொடுக்க வந்த 56 போ் என 61 போ் கோரிக்கை மனுக்கள் அளித்தனா்.
பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
