/

கோவில்பட்டியில் 9 பவுன் தங்க நகை திருட்டு

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:34 pm

Syndication

கோவில்பட்டியில் பெண்ணிடம் இருந்து 9 பவுன் தங்க நகை, கைப்பேசியை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி இந்திரா நகரைச் சோ்ந்தவா் முருகன் மனைவி தமிழ்செல்வி (45). இவா், வியாழக்கிழமை வங்கியில் இருந்து மீட்ட 9 பவுன் தங்க நகை, கைப்பேசியை பையில் வைத்துக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் மாா்க்கெட் சாலையில் உள்ள கடைக்கு சென்றாராம். தமிழ்செல்வி, கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த நகை, கைப்பேசி பையை காணவில்லையாம்.

இதுகுறித்து புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா், மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.