திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

News image

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்த கோட்டாட்சியா் கௌதம்.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:20 am IST

திருச்செந்தூரில் வாக்காளா்கள் விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூா், செந்தில்முருகன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய பேரணியை தோ்தல் நடந்தும் அலுவலா் கௌதம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பேரணியில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் தங்கமாரி, ஆதி திராவிடா் நல தனி வட்டாட்சியா் முருகேசன், மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் நாகராஜன், மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், தென்னிந்திய மாற்றுதிறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சங்கத்தைச் சோ்ந்த பிரேசில், அழகுலட்சுமி, ராமகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் சின்னத்துரை, வருவாய் ஆய்வாளா் மந்திரமூா்த்தி கணேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதில் மாற்றுதிறனாளிகள் 3 சக்கர வாகனத்தில் வந்து பங்கேற்றனா்.

பேரணி இரும்பு வளைவு, காமராஜா் சாலை, பேருந்து நிலையம் வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தது.