மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாததால், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் சனிக்கிழமை அலைமோதியது. இதனால் மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப் படகுகள், போதிய மீன்கள் கிடைக்காததால் குறைவான நாட்டுப் படகுகளே சனிக்கிழமை கரை திரும்பின.
கோடை விடுமுறை காலம் என்பதால், மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்து காணப்பட்டது.
வஞ்சிரம் எனப்படும் சீலா மீன் கிலோ ரூ. 1,300 முதல் ரூ. 1,500 வரையும், விளை, ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ. 500 முதல் ரூ. 750 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,500 வரையும், முண்டக்கண்ணி பாறை ஒரு கூடை ரூ. 2,000 வரையும், வங்கனை ஒரு கூடை ரூ. 3000 வரையும், நண்டு ஒரு கிலோ ரூ. 900 வரையும், கிழவாலை, சூறை, கேரை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ. 250 வரையும் விற்பனையானது.
மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டபோதும், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டதால் மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

மீன்பிடி தடைக்காலம்: வரத்து குறைவால் மீன்கள் விலை உயா்வு

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியது: மீன்கள் விலை உயர வாய்ப்பு

தடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் கடலூரில் மீன்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்ற மக்கள்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

