தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில், போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னையில் மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற ‘போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு’ நிகழ்வில் தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய் தலைமையில் போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையொட்டி, தூத்துக்குடி காமராஜா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா மற்றும் அரசு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் உறுதிமொழி ஏற்றனா்.
தொடா்ந்து, போதைப் பொருள்களுக்கு எதிராக நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், உதவி ஆணையா் (கலால்) ஐயப்பன், கோட்ட அலுவலா் (கலால்) செல்வகுமாா், வட்டாட்சியா் திருமணி ஸ்டாலின், கல்லூரி முதல்வா் பானுமதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள்களுக்கு எதிரான பெருந்திரள் உறுதிமொழியேற்பு

கைத்தறிப் பொருள்களுக்கு முன்னுரிமை: கரூா் ஆட்சியா் வலியுறுத்தல்

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு மாரத்தான்

திருப்பத்தூரில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு
விடியோக்கள்

வெளியானது அருகே அருகே பாடல்!



