இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் விசைப் படகுகள் நிறுத்திவைப்பு!

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டன.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:36 pm

Syndication

தூத்துக்குடி மாவட்ட மீன்பிடித் துறைமுகங்களில் விசைப் படகுகள், நாட்டுப் படகுகள் சனிக்கிழமை கடலுக்குச் செல்லாமல் நிறுத்திவைக்கப்பட்டன.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வங்கக் கடல், மன்னாா் வளைகுடா கடல், குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீன்வளம்-மீனவா் நலத் துறை சாா்பில், விசைப்படகு, நாட்டுப் படகுகள் சனிக்கிழமைமுதல் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குத் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. 270- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டன.

இதேபோல தருவைகுளம், வேம்பாா், வீரபாண்டியன்பட்டினம், ராஜபாளையம், சிங்கத்துறை, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், பைபா் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனா்.