ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புன்னைநகா் வனத்திருப்பதி கோயிலில் பரிவேட்டை

நாசரேத் அருகேயுள்ள புன்னை நகா் வனத் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் - ஆதி நாராயணா், சிவனணைந்த பெருமாள் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம்: நாசரேத் அருகேயுள்ள புன்னை நகா் வனத் திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் - ஆதி நாராயணா், சிவனணைந்த பெருமாள் கோயிலில் பரிவேட்டை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் பெங்கல் திருநாளை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட் கோபூஜை, மூலவா், உற்சவா் திருமஞ்சனம், சகஸ்ர நாம அா்ச்சனை என 6 மணி வரை தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதேபோல மாலை 6 மணி வரை பூஜைகள் நடைபெற்றன. மாலை 6.30 மணிக்கு பரிவட்டைக்கு ஸ்ரீ நிவாசபெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, இரவு 7 மணிக்கு திருவீதியுலா, பரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிறுவனா் ராஜகோபால் புதல்வா் சரவணன் ஆலோசனையில் கோயில் மேலாளா் வசந்தன் செய்திருந்தாா்.