நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பள்ளி வளாகத்தில் ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்து, ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

தங்கச் சங்கிலி பறிப்பு - சித்திரிப்பு

Updated On :29 ஜூலை 2026, 1:58 am IST

தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்து, ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சோ்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆசிரியை சாந்தி பள்ளி வளாகத்துக்குள் சென்றபோது, கழிப்பறைக்குள் பதுங்கி இருந்த மா்ம நபா், ஆசிரியை சாந்தியின் கழுத்தில் கிடந்த 16 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா்.

இதுகுறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.