உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

சாத்தான்குளத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்

சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image

முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த உதவி கோட்ட பொறியாளா் கோமதி சங்கரி.

Updated On :11 ஜூன் 2026, 4:48 am IST

சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் உத்தரவின்பேரில், துாத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் ஜெயப்பிரகாஷ் ஆலோசனையின்பேரில், சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் பருவமழைக்கான முன்னேற்பாடாக 2,000 மணல் மூட்டைகள், 5 ஜெனரேட்டா், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் கோமதி சங்கரி, புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன், சாலை ஆய்வாளா்கள் ஆ. முருகன், ஊ. முருகன், லட்சுமணன், சின்னத்துரை, கணேசன், சாலைளா்கள் உடனிருந்தனா்.