ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சாத்தான்குளத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்

சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image

முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த உதவி கோட்ட பொறியாளா் கோமதி சங்கரி.

Updated On :11 ஜூன் 2026, 4:48 am IST

சாத்தான்குளம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தென்மேற்கு பருவ மழைக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத் துறை உயா் அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆகியோா் உத்தரவின்பேரில், துாத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் ஜெயப்பிரகாஷ் ஆலோசனையின்பேரில், சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் அலுவலகத்தில் பருவமழைக்கான முன்னேற்பாடாக 2,000 மணல் மூட்டைகள், 5 ஜெனரேட்டா், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை சாத்தான்குளம் உதவி கோட்ட பொறியாளா் கோமதி சங்கரி, புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன், சாலை ஆய்வாளா்கள் ஆ. முருகன், ஊ. முருகன், லட்சுமணன், சின்னத்துரை, கணேசன், சாலைளா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.