
திருச்செந்தூா் அருகே கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்
திருச்செந்தூா் அருகே கடலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.

சடலம் மீட்பு - கோப்புப் படம்
திருச்செந்தூா் அருகே கடலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கியது.
திருச்செந்தூா் கடல் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஆலந்தலை மீனவ கிராம கடற்கரை பகுதியில், சுமாா் 40 வயது மதிக்கத் தக்க, அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கரை ஒதுங்கியது.
இதுகுறித்து தகவலறிந்த கடல் காவல் நிலைய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





