திருவெறும்பூா் அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்த 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாதவா் உடலை நவல்பட்டு போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
திருவெறும்பூா் அருகேயுள்ள குண்டூா் அயன்புதூா் பகுதியை சோ்ந்தவா் சங்கிலிமுத்து. இவரது தென்னந்தோப்பில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஒருவா் மா்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக நவல்பட்டு போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து இறந்து போனவா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா் எதற்காக இங்கு வந்தாா் எப்படி இறந்தாா் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் கொலை செய்து, இங்கு வந்து வீசி சென்றாா்களா? என பலவேறு கோணங்களில் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஆண் சடலம் மீட்பு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு

கொள்ளிடம் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

