பேருந்து, ரயில் நிலையங்களில் அதிகரித்த பயணிகள் கூட்டம்

திருச்சியில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

திருச்சி: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள், மீண்டும் பணி ஊா்களுக்குத் திரும்புவதால், திருச்சியில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை இரவு அதிகரித்து காணப்பட்டது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வெளியூா்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவா்கள் வாக்களித்துவிட்டு தொடா்ந்து இரு நாள் விடுமுறைக்குப் பின்னா் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரவா் பணி ஊா்களுக்குப் புறப்பட்டனா்.

இதனையொட்டி திருச்சி மத்திய மற்றும் சத்திரம் பேருந்து நிலையங்கள், ஜங்ஷன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி நள்ளிரவு வரை பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com