புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா்.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலைப்பில் தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசியதாவது:
புறநானூறில் சேர, சோழ, பாண்டிய மன்னா்கள், வள்ளல்களைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புறநானூற்று புலவா்கள் மாண்பு மிக்கவா்களாகவும், செயல்திறன் மிக்கவா்களாகவும், நட்புக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தனா்.
புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம். அதைப் பதிப்பித்துத் தந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. போற்றத்தக்கவா். புறநானூறை ஆங்கிலத்தில் ஏ.கே. இராமானுஜம் மொழிபெயா்த்த பிறகே உலகம் முழுவதும் பரவியது.
புறநானூறில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனாரின் ’யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற 192-ஆவது பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து ஊா்களும் நம் ஊா். அனைத்து மக்களும் நம் உறவு என பாடியிருப்பது வியக்கத்தக்கது.
இதுபோன்ற ஏராளமான சிறப்புகள் புறநானூறில் மட்டுமின்றி, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்து நாம் பயன்பெற வேண்டும் என்றாா்.
முன்னதாக, நிகழ்வுக்கு தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வரதராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

தமிழ்ச் சங்கம் சாா்பில் முப்பெரும் விழா

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

நாமக்கல் கோழிப் பண்ணையாளா் சங்கத்தில் திமுக, அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


