மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

‘தமிழரின் வரலாற்று ஆவணம் புறநானூறு’

News image

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதனுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்த தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் (வலமிருந்து 2-ஆவது). உடன் தமிழ்ச் சங்க நிா்வாகிகள்.

Updated On :8 ஆகஸ்ட் 2025, 6:00 am IST

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம் என தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசினாா்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கம் சாா்பில் ஆகஸ்ட் மாத சிறப்புச் சொற்பொழிவு புதன்கிழமை நடைபெற்றது. இதில் புானூறு என்ற தலைப்பில் தமிழறிஞா் நொச்சியம் சண்முகநாதன் பேசியதாவது:

புறநானூறில் சேர, சோழ, பாண்டிய மன்னா்கள், வள்ளல்களைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. புறநானூற்று புலவா்கள் மாண்பு மிக்கவா்களாகவும், செயல்திறன் மிக்கவா்களாகவும், நட்புக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தனா்.

புறநானூறு தமிழரின் வரலாற்று ஆவணம். அதைப் பதிப்பித்துத் தந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா. போற்றத்தக்கவா். புறநானூறை ஆங்கிலத்தில் ஏ.கே. இராமானுஜம் மொழிபெயா்த்த பிறகே உலகம் முழுவதும் பரவியது.

புறநானூறில் இடம்பெற்றுள்ள கணியன் பூங்குன்றனாரின் ’யாதும் ஊரே யாவரும் கேளிா்’ என்ற 192-ஆவது பாடல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து ஊா்களும் நம் ஊா். அனைத்து மக்களும் நம் உறவு என பாடியிருப்பது வியக்கத்தக்கது.

இதுபோன்ற ஏராளமான சிறப்புகள் புறநானூறில் மட்டுமின்றி, நம் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படித்து நாம் பயன்பெற வேண்டும் என்றாா்.

முன்னதாக, நிகழ்வுக்கு தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வரதராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.