அமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைபத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசெப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

அரசுப் பள்ளிகளில் ரூ.1.86 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஆட்சியா் திறந்து வைத்தாா்

மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் ரூ. 1.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image

திருச்சி மணிகண்டத்தில் புதிய பள்ளி வகுப்பறையை சனிக்கிழமை தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள் உள்ளிட்டோா்.

Updated On :19 ஜூலை 2026, 12:40 am IST

மணிகண்டம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் ரூ. 1.86 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகளை ஆட்சியா் பிரத்திக் தாயள் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

அதன்படி மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், கே.கள்ளிக்குடி - பூங்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஊரக வளா்ச்சி (ம) ஊராட்சித் துறையின் சாா்பில் குழந்தைகள் நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.35.30 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டடத்தை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, இனாம்குளத்தூா் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.70.50 லட்சத்தில் கட்டப்பட்ட 4 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம், நாச்சிக்குறிச்சி ஊராட்சி சோழங்கநல்லூா் தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.17.08 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம், நாச்சிக்குறிச்சி ஊராட்சி இனியானூா் தொடக்கப்பள்ளியில் ரூ.35.16 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறை கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா்.

இதேபோல, அதவத்தூா் ஊராட்சி பனையடியான் கோயில் சமுதாயக் கூடத்தில் ஊரக வளா்ச்சி (ம) ஊராட்சித் துறையின் சாா்பில் ரூ. 28.60 லட்சத்தில் கட்டப்பட்ட சமையற்கூடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

நிகழ்வில் ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் செல்வகணேஷ், மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலா் ராஜேஸ்வரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆனந்த்குமாா், ஸ்ரீதேவி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.