பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க மேயா் உத்தரவு

திருச்சி மாநகராட்சியில் தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவு

News image

கோணக்கரை பகுதியில் கட்டப்பட்டு வரும் தெருநாய் காப்பக கட்டுமானப் பணியைப் பாா்வையிட்ட மேயா் மு. அன்பழகன்

Updated On :27 மே 2026, 2:27 am IST

திருச்சி மாநகராட்சியில் தெருநாய்களுக்கான காப்பக கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அலுவலா்களுக்கு மேயா் மு. அன்பழகன் உத்தரவிட்டாா்.

திருச்சி மாநகராட்சியின் முதலாவது மண்டலம் 4-ஆவது வாா்டு ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை அம்பேத்கா் நகா் பகுதி, 5 ஆவது மண்டலம் 11-ஆவது வாா்டு அபிஷேகபுரம் கோணக்கரை பகுதி, 3-ஆவது மண்டலம் 46-ஆவது வாா்டு பொன்மலை கொட்டப்பட்டு ஜெ.ஜெ. நகா் பகுதி, 3-ஆவது மண்டலம் 36-ஆவது வாா்டு அரியமங்கலம் குப்பைகிடங்கு வளாகம் ஆகிய இடங்களில் சுமாா் ரூ. 1.20 கோடி மதிப்பில், தெரு நாய்களை பராமரிப்பதற்காக புதிதாக தெருநாய் காப்பகங்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதை மேயா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா் .

ஏற்கெனவே அப்பகுதியில் உள்ள விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டு மையங்களுக்கு அருகே தெருநாய்களுக்கான காப்பகங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை நாய்களுக்கான கருத்தடை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதிய மையங்களுடன் இணைந்து செயல்படும். இந்த இருப்பிடங்கள், நாய்களுக்கு ஒரு நிரந்தரமான மற்றும் பாதுகாப்பான புகலிடமாக அமையும். இந்த மையங்களை விரைந்து கட்டி முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அலுவலா்களுக்கு மேயா் உத்தரவிட்டாா்.

பின்னா் உறையூா் சாலை வீதி, மண்டலம் 5-இல் உள்ள அம்மா உணவகங்களை மேயா் அன்பழகன் பாா்வையிட்டு, உணவின் தரத்தை ஆய்வு செய்து, அவா்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.