இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அரியலூர் அருகே  ஜாமீனில் வெளியே வந்த போலி மருத்துவர் மீண்டும் கைது

அரியலூர் அருகே ஜாமீனில் வெளியே வந்த போலி மருத்துவர் மீண்டும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:22 pm

DIN

அரியலூர் அருகே ஜாமீனில் வெளியே வந்த போலி மருத்துவர் மீண்டும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் மேலப்பழுவூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(52). பி.எஸ்.ஸி.,கம்பியூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், வேறு ஒருவரின் பெயரில் அப்பகுதியில்  மருந்தகம் (மெடிக்கல்) நடத்தி வருகிறார். உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு அவ்வப்போது ஊசி போட்டும், மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்துள்ள இவரை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார், கடந்த 21 ஆம் தேதி அவிலா சரஷா என்ற பெண்ணுக்கு சிகிச்சை அளித்ததில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு,  கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். 
இதுகுறித்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரை வியாழக்கிழமை மீண்டும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.