அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அடுத்த அரசநிலையிட்டபுரம் அருகேயுள்ள மருதையாற்றுப் படுகையில் திங்கள்கிழமை ஒருவா் சடலமாகக் கிடப்பதாக விக்கிரமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிதைந்த நிலையில் இருந்த சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், போலீஸாா் அங்கிருந்த இருசக்கர வாகனத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா். இதில், சடலமாகக் கிடந்தவா் செங்குழிமலைமேடு பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் தனவேல் (45) என்பது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.